சேலம் அருகே இளம்பெண் தற்கொலை!!
சேலம் அருகே கணவன் தொடர்ந்து குடித்து விட்டு வந்ததால் வருத்தமடைந்த மனைவி தீக்குளித்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேலூர் பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் மகள் கவுசல்யா (20). இவருக்கும் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் இடையே 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கணவர் தொடர்ந்து குடித்து விட்டு வந்ததால் கவலையடைந்த கவுசல்யா குடிக்கக்கூடாது என சத்தியம் வாங்கியுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக கோவிந்தராஜ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் நேற்றிரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென சமையலறைக்குள் நுழைந்த கவுசல்யா அங்கிருந்த மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Average Rating