13500 அடி உயரத்திலிருந்து பாய்ந்த 79 வயது பாட்டி!!
அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயதான பாட்டியொருவர் 13500 அடி உயரத்தில் வைத்து எயார் பிளேனிலிருந்து பரசூட் மூலம் தரையில் குதித்துள்ளார். கரோலின் மெய்ஸல்பேர்க் என்ற 79 வயதான பெண்மணியே இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கார்டினர் எனுமிடத்திலிருந்து குதித்துள்ளார்.
பல வகையான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பாட்டி, அவரது 3 பிசியதெரபி வைத்தியர்களின் ஆலோசனைகளையும் மீறியே இவ் அபாயகரமான செயலை செய்துள்ளார். கரோலின் 2 தடவைகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர். மேலும் நீரிழிவு, ஒஸ்ரியோபொறோஸிஸ் மற்றும் வாதம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது 79ஆவது வயதில் துணிச்சலாக 13500 அடி உயரத்திலிருந்து குதித்துள்ளார். இதன்போது இவருடன் 60 வயதான பயிற்சியாளர் ஒருவரும் குதித்துள்ளார். இவர் அமெரிக்க இராணுவத்தில் 6 வருடங்கள் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating