சென்னைவாசியான லட்சுமி மேனன்!!
“கும்கி படத்தில் நடிக்க கமிட்டான போது, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் லட்சுமி மேனன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, “ரொம்ப சின்ன பெண்.
ஆனாலும், பிரமாதமாக நடிக்கிறாள் என்று அப்பட டைரக்டரான பிரபு சாலமன் சொல்லக் கேட்டு, உடனே தன் “சுந்தர பாண்டியன் படத்துக்கு, லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்தார் சசிகுமார்.
அவர் நடித்த, முதல் இரண்டு படங்களுமே ஹிட் ஆனதால், மீண்டும் தன், “குட்டிப்புலி படத்துக்கு சசிகுமார், லட்சுமி மேனனை புக் செய்ய, அடுத்தடுத்து “மஞ்சப்பை, சிப்பாய், பாண்டியநாடு சித்தார்த்துடன் ஒரு படம் என, அரை டஜன் படங்களில் கமிட்டாகி “பிசி நடிகையாகி விட்டார்.
அதனால் மீண்டும் படிக்கப் போவதாக கூறிய லட்சுமி மேனன், இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு நடிப்பே கதியென்றாகி விட்டார்.
அத்துடன், கேரளாவுக்கும், தமிழகத்துக்கும், அலைந்து கொண்டிருந்ததையும் விடுத்து, சென்னையிலேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
Average Rating