குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் முனுசாமி (30). கூலி தொழிலாளி. மனைவி பிரியா (25). தம்பதிக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முனுசாமி வேலைக்கு போய் விட்டு தாமதமாக வீட்டிற்கு வந்தார்.
இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பிரியா உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை சென்னை கேம்எம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசில் பிரியாவின் அம்மா மல்லிகா வரதட்சணை கொடுமையால் மகள் இறந்ததாக புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.
Average Rating