கணவன் கொலை ; மனைவி கைது!!
Read Time:1 Minute, 7 Second
கள்ளக்காதலுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊதியூரைச் சேர்ந்தவர், தெய்வ சிகாமணி, 40; கொப்பரை வியாபாரி. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், நில புரோக்கரானார்.
இவரது மனைவி சசிகலா, 28. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 29ம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, தெய்வ சிகாமணியை, ஒரு கும்பல் கொலை செய்தது.
ஊதியூர் போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும் சசிகுமார், 28, என்பவருக்கும், கள்ள தொடர்பு ஏற்பட்டு, மனைவியே கணவரை கொலை செய்ய தூண்டியதாக தெரிய வந்தது. சசிகலாவை, போலீசார் கைது செய்துள்ளனர்; தப்பிய சசிகுமாரை, தேடி வருகின்றனர்.
Average Rating