பணிப்பெண்ணாக மனைவியை அனுப்பிவிட்டு மனநோயாளி பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம்!!
Read Time:1 Minute, 5 Second
மனநோயால் பீடிக்கப்பட்டிருந்த 33வயது பெண்ணொருவரை தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்திய 36வயது நபரொருவரைத் தேடி கட்டுகஸ்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மனநோயால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமடைந்துள்ளதை அறிந்து கொண்ட இந்த நபர் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருமணமான இந்த சந்தேக நபரின் மனைவி பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற பின்னர் இந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கட்டுக்தொட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
Average Rating