சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நால்வரில் ஒருவர் கைது..!!
இரு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சொல்லப்படும் நால்வரில் ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் 14 வயதுடைய மன நோயால் பீடிக்கப்பட்டவரும் அடங்குவதோடு மற்றைய சிறுமி 13 வயதுடைய அவரின் சகோதரியாவார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்விரு சிறுமிகளும் தங்கொட்டுவை ஹால்தவன எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமிகளது மற்றொரு சகோதரியின் கணவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சிறுமிகளது தந்தை அவர்களது தாயைப் பிரிந்து சென்றதன் பின்னர் தாய் வேறொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் சிறியதொரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகளின் சகோதரி ஒருவரின் 26வயதுடைய கணவரினால் இசசிறுமிகள் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
அத்துடன் அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மேலும் மூவரும் இச்சிறுமிகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவங்களை தெரிந்து கொண்ட சிறுமிகளின் பாட்டி சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating