ரம்புட்டான் மரக்கிளை வெட்டச் சென்றவர் உயிரிழப்பு..!!
Read Time:52 Second
காலி, மத்துகம பொலிஸ் பிரிவில் நவத்துடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இன்றுகாலை 8 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் உள்ள ரம்புட்டான் மரத்தில் கிளைவெட்டச் சென்ற வேளை, வெட்டப்பட்ட மரக்கிளை மின் கம்பியில் விழுந்ததில் குறித்த நபர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.
54 வயதுடைய நாராயன் சிவராம் என்பரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating