யாழ் கொடிகாமம் பகுதியில் இரு பெண்கள் கொலை
Read Time:48 Second
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 12 .45 அளவில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதான பெண் ஒருவரும், 18 வயதான யுவதி ஒருவரும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
Average Rating