வடக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம் வசப்படுத்தியுள்ளது.
இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புபுக்கே கிடைக்கப்பெறும். எனவே வடமாகாணத்தில் 30 ஆசனங்களைப் கைப்பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
Average Rating