அமெரிக்காவில் மூன்று சரக்கு ரயில்கள் மோதி விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டதில் 20 பெட்டிகள் தடம் புரண்டன. ஊழியக் குழுவினரில் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமரில்லோ ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை கிழக்கு நோக்கி செல்லும் பி.என்.எஸ்.எப் ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியது.
அதே சமயம் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயில் இந்த இரு ரயில்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக அம்மாகாணத்தின் பொது பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி கிரிஸ் ட்ரூப்பர் தெரிவித்துள்ளார்.
இந்த இடிபாடுகளின் சேதங்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ரயில்களில் இருந்து அபாயகரமான பொருட்கள் எதுவும் வெளியேறவில்லை என்று தகவல் தொடர்பாளரான ஜோ பாஸ்ட் தெரிவித்துள்ளார்.
சேத மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டபோது ஒரு எஞ்ஜின் முழுவதும் சேதமடைந்துள்ளதும், 20-லிருந்து 30 ரயில் பெட்டிகள் வரை தடம் புரண்டிருந்ததும் குறிப்பிடப்பட்டது.
Average Rating