லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!
மெதுவாகச் சென்று கொண்டிருந்த லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளைக் கீழே தள்ளிய நபர்!: திருடியவற்றை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது-
வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லொறி மெதுவாகச் செல்வதனை அவதானித்த நபரொருவர் அதற்குள் ஏறி அங்கிருந்த 18 வெங்காய மூடைகளை கீழே தள்ளி அவற்றினை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலுத் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ். நகருக்கு புத்தளம் வழியாக பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவது வழக்கம்.
அதன் பிரகாரம் கடந்த திங்களன்று, பொருட்கள் ஏற்றப்பட்ட லொறி ஒன்று இரவு நேரத்தில் புத்தளம் நகரைத்தாண்டி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பாங்கான பகுதியில் மெதுவாக சென்றுகொண்டிருந்திருந்தது, இதனை அவதானித்த நபரொருவர் பின் வழியால் லொறிக்குள்ள ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த 18 மூடை வெங்காயத்தை ஒவ்வொன்றாக வீதியில் எறிந்துள்ளார்.
பின்னர் அவைகளை சேகரித்து நகரிலுள்ள வர்ததக நிலையங்களில் விற்பனை செய்ய முயன்றபோது புத்தளம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை விசாரனைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating