மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 வருடகால கடூழியச் சிறை!
தமது 16 மற்றும் 13 வயது மகள்மாரை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட தந்தையொருவருக்கு 120 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட உயர் நீதிமன்ற நீதியரசர் கேமா சுவர்ணாதிபதி இத் தண்டனையை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட இரு யுவதிகளுக்கும் தலா பத்து இலட்ச ரூபா நஷ்டஈடாக வழங்கும்படியும் இத் தொகையை செலுத்தாவிட்டால் மேலும் நான்கு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
ஹொரவபொத்தான கப்புகொல்லேவ என்ற இடத்தைச் சேர்ந்த கே. அமரசிரி குணவர்தன என்ற 40 வயதான நபருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 21 ஆம் திகதி தொடர்ந்தும் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமது 16 வயது புதல்வியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2012 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் தமது 13 வயது புதல்வியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் இவர் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Average Rating