துபாயில் சீன பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையர் கைது

Read Time:2 Minute, 13 Second

rape.sexதுபாயில் தாம் அநா­த­ர­வாக விடப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த நாட்டில் தொழில் புரியும் சீனப் பெண்­ணிடம் உதவி கோரும் போர்­வையில் அப்­பெண்ணை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் பேரில், துபாயில் பணி­பு­ரியும் இலங்­கையர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தூத­ரக வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

துபா­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்றில் இலி­கி­த­ராக பணி­பு­ரியும் 32 வயது இலங்­கை­யரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். தமது வாக­னத்தை செலுத்திக் கொண்­டி­ருந்த சந்­தேக நப­ரான இலங்­கையர் தமக்கு தமது மனைவி சிகிச்சை பெறும் வைத்­தி­ய­சா­லைக்­கான வழி தெரி­யாமல் தடு­மா­று­வ­தா­கவும் தமக்கு உத­வும்­ப­டியும் சீனப் பெண்­ணிடம் கேட்­டுள்ளார்.

பின்னர் இந்த இலங்­கையர் பலாத்­கா­ர­மாக தம்மை வாக­னத்தில் ஏற்றிக் கொண்டு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக அப்பெண் துபாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். முறைப்­பாட்டை அடுத் இந்த இலங்­கையர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் தூத­ரக வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கை­ய­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்த 19 வய­தான சீன யுவதி துபாயில் விற்­பனை உத­வி­யா­ள­ராக பணி­பு­ரிந்து வருகிறார். கைதான இலங்கையரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) ‘சலாலா மொபைல்ஸ்’ – டீஸர்
Next post இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!