துபாயில் சீன பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையர் கைது
துபாயில் தாம் அநாதரவாக விடப்பட்டுள்ளதாக கூறி அந்த நாட்டில் தொழில் புரியும் சீனப் பெண்ணிடம் உதவி கோரும் போர்வையில் அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துபாயிலுள்ள நிறுவனமொன்றில் இலிகிதராக பணிபுரியும் 32 வயது இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். தமது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த சந்தேக நபரான இலங்கையர் தமக்கு தமது மனைவி சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கான வழி தெரியாமல் தடுமாறுவதாகவும் தமக்கு உதவும்படியும் சீனப் பெண்ணிடம் கேட்டுள்ளார்.
பின்னர் இந்த இலங்கையர் பலாத்காரமாக தம்மை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக அப்பெண் துபாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத் இந்த இலங்கையர் கைது செய்யப்பட்டதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையருக்கு எதிராக முறைப்பாடு செய்த 19 வயதான சீன யுவதி துபாயில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கைதான இலங்கையரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating