ஒருவேளை உணவுக்காக 2500 ரூபாய் செலவிடும் அமைச்சரின் மகன்
இலங்கையில் வாழும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன ஒரு முறை கூறியிருந்தார்.
அமைச்சர், நாட்டு மக்களை மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தில் வாழுமாறு கூறினாலும், இதுவரை தொழில் எதனையும் செய்யாத அமைச்சரின் மகன்மார் ஒருவேளை உணவுக்காக மட்டுமே 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கும் மேல் செலவிடுகின்றனர்.
கல்வியமைச்சரின் சில புதல்வர்கள் தற்பொழுது வெளிநாட்டில் கல்வி கற்று வருகின்றனர். அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் அவரது மனைவி ஜயந்தி குசுமசந்திரவுக்கும் 5 பிள்ளைகள்.
இவர்களுக்கு சத்துர சஹான் குணவர்தன, வேரங்க கல்ஹார குணவர்தன என்ற ஆண் பிள்ளைகளும், ஜயதி ரந்துலா குணவர்தன, குமுதுமலி கல்ஹாரி குணவர்தன, ஹசாங்சலி துலானி குணவர்தன ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
பந்துல குணவர்தனவின் மூத்த புதல்வர் கொழும்பில் உள்ள ஆடம்பர உணவகம் ஒன்றுக்கு சென்று, தந்தை மாதத்திற்கு செலவிடும் பணத்தை ஒரு வேளை உணவுக்கு செலவிடுவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Average Rating