மனைவியுடன் தகராறு பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை
Read Time:46 Second
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கல்கமுவ – மெதகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கான்ஸ்டபிளே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் வீட்டுக்கு முன்னால் இன்று காலை இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating