பாடசாலைக்குச் செல்ல வெட்கப்பட்டதால் வெளியே வந்த துஷ்பிரயோக தகவல்..
விகாரைக்கு வர்ணம் தீட்டுவதற்காக உதவிக்குச் சென்ற மாணவனை விகாரையின் பிக்கு ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பாக கொஸ்வத்தை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்வத்தை பகுதியின் கொலகஸ்தன்னை பிரதேச பாடசாலை ஒன்றில் ஆண்டு ஒன்பதில் கல்வி கற்று வந்த மாணவரொருவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவன் மறுதினம் பாடசாலைக்கு செல்ல மறுக்கவே அது குறித்து மாணவனின் பெற்றோர் தனது மகனிடம் விளக்கம் கேட்டனர்.
மாணவன் தனற்கேற்பட்ட நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவித்ததுடன் தனக்கு பாடசாலைக்கு செல்ல வெட்கமாக இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இப் புகாரின் பேரில் குறிப்பிட்ட பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்து உட்பட்ட மாணவர் வைத்திய பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது துஸ்பிரயோகத்திற்குற்பட்டமை ஊர்ஜிதமாகியுள்ளது.
இவ்வைத்திய அறிக்கையுடன் கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Average Rating