ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த, கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை
ஜேர்மனியில் மனைவியை கொன்று புதைத்த கணவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனின் பான் மாகாணத்தை சேர்ந்த காங்கிஸ்விண்டர்(வயது 52) என்பவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த 2008ம் ஆண்டு காதலர் தினத்தன்று குளியலறையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது அவரது மனைவி, கணவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த காங்கிஸ்விண்டர் தனது மனைவியை இழுத்து பிடித்ததில் அவரது மனைவி தடுமாறிய நிலையில் தரையில் வழுக்கி விழுந்துள்ளார்.
மேலும் தன் மனைவியை, சுவரில் இடித்ததுடன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதன்பின் தன் மனைவியை புதைத்து விட்டு, வேறொருவருடன் அவர் ஓடிவிட்டதாக தன் குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் கூறி நம்ப வைத்தது மட்டுமல்லமால் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தற்போது இவரது மகள்(வயது 21)அளித்த புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட பொலிசார் காங்கிஸ்விண்டர் மனைவியின் சடலத்தை அவர் வீட்டு தோட்டத்திலிருந்து தோண்டி எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் காங்கிஸ்விண்டருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நேற்று முன்தினம் பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating