பசியினால் அழுத பிள்ளைக்கு தவறுதலாக மண்ணெண்ணை பருக்கிய 3 வயது சிறுவன்..
Read Time:1 Minute, 27 Second
அழுது கொண்டிருந்த குழந்தையின் பசியைப் போக்குவதற்காக பால் என நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை பருக்கியதினால் பாதிக்கப்பட்ட நான்கு மாத பிள்ளை ஒன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஏழாலை வடக்கில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழந்தையின் தாய் தனது நான்கு மாத பிள்ளையையும் மற்றும் தனது மூன்று வயது பிள்ளையையும் வீட்டில் விட்டு வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளச்சென்றுள்ளார்.
இதன் போது நான்கு மாத பிள்ளை அழுத் தொடங்கியதும் விடயம் தெரியாத மூன்று வயது சிறுவன் வீட்டிலிருந்த மண்ணெண்னை போத்தலை எடுத்து வந்து சகோதரிக்கு பருக்கியுள்ளார்
இதனால் அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டு அழும் சப்தத்தைக் கேட்ட தாய் உடனடியாக அங்கு சம்பவத்தைப் புரிந்து கொண்டதுடன் குழந்தையை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
Average Rating