கணவன் முகத்தையும், மார்பையும் கடித்துக் குதறிய; பெண் டாக்டர்..
Read Time:1 Minute, 14 Second
திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் ஏற்பட்ட சச்சரவில் கணவனின் முகத்தையும் மார்பையும் கடித்து குதறிய பெண்ணொருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும் படி கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.
தெஹிவல அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார். சந்தேக நபர் ஒரு வைத்தியர் எனவும் கணவருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு கணவரைத் தாக்கி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கணவர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து பொலிஸார் மனைவியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
Average Rating