சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
Read Time:1 Minute, 18 Second
புத்தளம், கல்லடி பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாது சிறுமியுடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து வரும் இளைஞன் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் கடந்த முதலாம் திகதிவரை தான் குறித்த இளைஞனுடன் வாழ்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி தானாக விரும்பி இளைஞனுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும், சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்வது குற்றம் என்ற நிலையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating