கர்ப்பிணி பலி; வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைத்தியர் கைது!
கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கர்ப்பிணிப் பெண் ஒருவரை வாகனத்தில் மோதி, அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த வைத்தியர் லீலான் ஜெயரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27ம் திகதி புறக்கோட்டை – குணசிங்கபுர பகுதியில், 27 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது இவர் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளரான இவர், பின்னர் சிங்கப்பூர் ஊடாக அமெரிக்க தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று புறக்கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுத்ததாகவும், அது தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating