அமெரிக்க இராணுவ வீரர் தொடர்பில் சர்ச்சை..
ஆப்கானிஸ்தான் – தாலிபானியர்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரரின் வருகைக்காக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த இராணுவ அதிகாரி அமெரிக்க இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்ற காரணத்தாலேயே இந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
5 வருடங்களாக தலிபானியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
அவர் 2009ஆம் ஆண்டு எவ்வாறு தலிபானியர்களின் கைகளில் சிக்கினார் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
எனினும் அவர் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில் பணியாற்றி இருந்த வேளையில், 2009ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னரே அவர் தலிபானியர்களால் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில் அவரை தண்டனைக்கு உட்படுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Average Rating