பாலியல் வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!
இத்தாலியில் நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவரும், மத்தியில் ஆட்சியில் உள்ள மைய வலதுசாரிக் கட்சியின் மீது செல்வாக்கு கொண்டவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது வரி மோசடி, ஊழல், செக்ஸ், பதவி துஷ்பிரயோகம் என்று பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் வரி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை தீர்ப்பு பெற்ற அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
இருப்பினும் அவரது வயது கருதி பொது மன்னிப்பின் கீழ் இந்தத் தண்டனை ஒரு வருட சமூக சேவையாக மாற்றப்பட்டது. இதனால் அவரால் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யவும், அரசியல் பங்காற்றவும் முடிந்தது.
பெர்லுஸ்கோனி மீதான செக்ஸ் மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்த வழக்குகளின் தீர்ப்பு மீதான மறுவிசாரணை இன்று மிலனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வந்தது. ஏழு வருட சிறைத்தண்டனையும், பொது பதவிகளிலிருந்து விலக்கமும் அளித்திருந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இன்று மிலன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சுருக்கமான அறிக்கை மூலம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து பெர்லுஸ்கோனியை விடுவித்த நீதிபதிகளின் விரிவான அறிக்கை 90 நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லுஸ்கோனி எதிர்கொண்ட பரபரப்பான விசாரணை இது என்று கூறப்பட்டபோதிலும் இதுவே இறுதித் தீர்ப்பாக இருக்காது என்று கூறப்படுகின்றது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இத்தாலியின் உச்ச நீதிமன்றத்தில் முறையிடக்கூடும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரூபி விசாரணை எனப்படும் இந்த இறுதி விசாரணையின் முடிவுகள் அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற குற்றவியல் வழக்கில் இரண்டாவது உறுதியான தீர்ப்பின்போது பொது மன்னிப்பு நீக்கப்பட்டு அவரது தண்டனையை வீட்டுக் காவலில் பெர்லுஸ்கோனி கழிக்கவேண்டியிருக்கும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating