திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!!
Read Time:1 Minute, 17 Second
திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் நாகபாண்டி (25). இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி சாக்கு வியாபாரம் செய்து வந்தார்.அதில் ரூ.20 ஆயிரம் பணம் கட்டிவிட்டார். மீதி தொகையை கட்ட முடியவில்லை. தனது தாயிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியபோது அவர் நீ, கடனை கட்டாவிட்டால் திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த நாகபாண்டி அங்குள்ள குளத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating