மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிரடிப்படை வீரர் பொலிஸாரால் கைது!!
Read Time:1 Minute, 13 Second
மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மகியங்கனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தாயார் மகியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே மேற்படி வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆசிரியை ஒருவரை திருமணம் முடித்தவர் எனவும் இரு பிள்ளைகளுக்கு தந்தையெனவும் தெரிய வருகிறது. இவர் மாணவியை கடத்திச் சென்று மாத்தளையில் உள்ள உறவினர் வீடொன்றில் வைத்து பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக கூறப்படுகிறது. சந்தேக நபருக்கு புகலிடம் கொடுத்த வீட்டுரிமையாளரைக் கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating