தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!
தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
இதுகுறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் இசாக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அவர் உடுத்தியிருந்த ஆடைகள் களைந்து அலங்கோலமாக காணப்பட்டது. எனவே அவரை மர்ம கும்பல் கற்பழித்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையில் துப்பு துலக்குவதற்காக ஈரோட்டில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. கோவையில் இருந்து தடயவியல் நிபுணர் தங்கவேல் வரவழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த வளையல் மற்றும் பொருட்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தார்.
சம்பவ இடத்தில் வளையல்கள் உடைந்து சிதறிக்கிடப்பதால் அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுடன் போராடியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் அந்த பெண் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, தங்கத்தாலி, மெட்டி ஆகியவை அப்படியே இருக்கிறது.
எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. பெண் பிணமாக கிடந்த இடத்தில் ஒரு பை கிடந்தது. அதில் 4 சேலைகள் ரொட்டி, ஜாக்கெட் மற்றும் சில பொருட்கள் இருந்தது.
வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் மோட்டலில் நிறுத்தப்படுகின்றன. அப்போது சிலர் இதுதான் தாராபுரம் என இறங்கி விடுகின்றனர். பஸ் கிளம்பிய பின்னர்தான் இது பஸ் நிலையம் அல்ல என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது.
அதன் பின்னர் எங்கு செல்வது? என்று வழி தெரியாமல் நிற்கும் போது தான் சிலர் அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்று நகை பறிப்பது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
காட்டில் பிணமாக கிடந்த பெண்ணின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
Average Rating