கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்!!
Read Time:1 Minute, 16 Second
பழனி அருகே திருமணமான பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.
பழனி அருகே உள்ள கீரனூர் கோட்டத்துறையை சேர்ந்தவர் முருகன் (வயது 48). பழனி தேவஸ்தான பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி (46). சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பேரன், பேத்தி கண்ட நிலையில் கவுரிக்கு தன்னுடன் வேலை பார்க்கும் கொத்தனார் தாராபுரம் மணக்கடவூரை சேர்ந்த வேலனுடன் தொடர்பு ஏற்பட்டது.
கடந்த 8–ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கவுரி வீடு திரும்பவில்லை. அதுபற்றி அவரது கணவர் விசாரித்தபோது கொத்தனார் வேலன் கவுரியை கடத்திச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கீரனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating