அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை கைது!!

Read Time:2 Minute, 16 Second

75345d21-fd93-4b96-9f55-ab8c5e1427d6_S_secvpfஅமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அர்கன்சாஸ் மாகாணம் பென்டன் கவுண்டியில் உள்ள சிலோயம் ஸ்பிரிங்ஸ் இன்டர்மீடியேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி பெய்த் மெக்கார்மிக் (வயது 32). ஒரு குழந்தைக்கு தாயான இவரது வீட்டிற்கு 13 வயது மாணவன் ஒருவன் தனது நண்பனுடன் கடந்த சில மாதங்களாக அடிக்கடி சினிமா பார்க்க சென்றுள்ளான்.

சிறிது நேரம் கழித்து நண்பன் வெளியேறியபிறகு மாணவன் மட்டும் நீண்டநேரம் அந்த வீட்டில் இருந்துள்ளான். இந்த பழக்கம் நாளடைவில் அவனுக்கும் ஆசிரியைக்குமிடையே மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உடலுறவு வைத்துள்ளனர்.

ஒருநாள் மாணவனின் செல்போனுக்கு ஆசிரியை அனுப்பிய நிர்வாண படங்களை அவனது நண்பன் பார்த்ததால் இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியை மெக்கார்மிக்கை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து மின்னணு குறுஞ்செய்திகள், இரண்டு யுஎஸ்பி டிரைவ்கள், ஐபேட், இரண்டு ஆப்பிள் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றினர்.

பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அர்கன்சாஸ் மாகாண சட்டத்தின்படி, வயது வந்த நபர்கள் சிறுவர்களுடன் ஒப்புதலுடன் கூடிய உறவு வைத்தாலும் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த இடம் தெரியுமா?
Next post ஆர்யமானவரை மயக்கிய நடிகை!!