2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்!!
Read Time:1 Minute, 13 Second
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லெனின் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கோதை (வயது31). இவர்களது மகன்கள் தினேஷ் (13), சதீஷ் (10).
சம்பவத்தன்று லெனின் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பியபோது வீடு பூட்டிக் கிடந்தது. மனைவி, மகன்களை காணவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தார். அங்கும் அவர்கள் இல்லை. குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் குழந்தைகளுடன் மனைவி மாயமானது லெனினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர் தேவாரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். அவர் எங்கு சென்றார். எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating