உமராபாத் அருகே தாயை கல்லால் தாக்கிய மகன் கைது!!
Read Time:48 Second
ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி மனைவி முனியம்மாள் இவரது மகன் திருப்பதி (வயது 33) கூலி தொழிலாளி. நேற்று குடிபோதையில் தனது தாயிடம் ஏதோ கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த திருப்பதி முருகம்மாள் தலையில் கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
Average Rating