கள்ளகாதல் தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர்!!
தேனி அருகில் உள்ள சின்னமனூர் துரைச்சாமிபுரம் வடக்குதெருவை சேர்ந்த பெரியாமி மகன் பாண்டியன்(வயது48). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், 1 மகளும், 1 மகனும் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த பாண்டி மகன் விஜயன்(30). இவர் கேரளா ஆனைமலை எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார்.
விஜயனின் மாமியாருக்கும், பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுகுறித்த விபரம் விஜயனுக்கு தெரியவரவே அவர் பாண்டியனை கண்டித்தார்.
இன்று காலை துரைச்சாமிபுரம் தென்னந் தோப்பில் நின்று கொண்டிருந்த பாண்டியனுடன் விஜயன் தனது மாமியாரை சந்திக்க கூடாது என்று சத்தம்போட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் விஜயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். உயிருக்கு பயந்து பாண்டியன் ஓடி அங்கிருந்த ஒரு கிணற்றில் விழுந்தார்.
இருந்தபோதும் விஜயன் அவரை துரத்திச்சென்று கிணற்றுக்குள் அவரும் இறங்கி தாக்கினார். இதில் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைபார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பாண்டியன் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜயனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating