கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது!!
மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் அண்ணா நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (27). இவரது மனைவி அம்சரேகா. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 22–ந்தேதி உடல் நலக்குறைவால் சத்தியநாராயணன் இறந்ததாக மனைவி தெரிவித்தார். இதையடுத்து உடலை அடக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.
அப்போது சத்தியநாராயணன் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சத்தியநாராயணன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
அம்சரேகாவிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலன் ஆறுமுகத்துடன் சேர்ந்து கணவர் சத்திய நாராயணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அம்சரேகா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
கட்டிட வேலைக்கு செல்லும் போது பக்கத்து தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரும் வந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் அவர் வேறு கட்டிடப்பணிக்கு சென்ற போதும் எங்கள் தொடர்பு நீடித்தது. கணவர் வீட்டில் இல்லாத போது இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
சில நாட்களுக்கும் முன்பு நாங்கள் ஒன்றாக இருந்ததை கணவர் சத்தியநாராயணன் பார்த்து விட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்கு காதலன் ஆறுமுகமும் சம்மதித்தார். 21–ந்தேதி இரவு வீட்டில் தூங்கிய சத்தியநாராயணனை கழுத்தை நெரித்து கொன்றோம். இயற்கையாக அவர் இறந்ததாக நாடகம் ஆடினேன். போலீசார் விசாரித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating