சிங்கப்பூரில் இந்தியப் பெண் ரூ.8 கோடி முறைகேடு!!
Read Time:1 Minute, 19 Second
சிங்கப்பூரில் உள்ள ‘ரெட் ஸ்டார் மரைன் கன்சல்டன்ட்ஸ்’ என்ற நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்து வந்தவர், சத்வந்த் கவுர் (வயது 48).
இந்தியப் பெண்ணான இவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் காசோலை மூலமாக 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 16 லட்சம்) முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், 2005 ஏப்ரல்-2012 ஆகஸ்டு இடையே நடந்துள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் கவுர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் உள்பட இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இந்த வழக்கில் 4 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating