மாமியாருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!
Read Time:45 Second
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் அசோக் பாலாஜி (30). வங்கி ஊழியர். இவரது மனைவி அனு என்கிற டில்லி பாய் (27). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.
டில்லி பாய்க்கும், மாமியார் சர்மிளா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண் டில்லி பாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் கணவர் பாலாஜி, மாமியார் சர்மிளா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating