கற்பழிப்பு வழக்கில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி கைது!!

Read Time:1 Minute, 46 Second

5111f7b3-fcef-4419-89be-879218bc5cc8_S_secvpfதிருமணமான 29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுவதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர் நேஷ்ராம் (வயது 55). இவர் தனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவிக்கு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவரது வீடடிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

திங்கட்கிழமை மாலையில் அந்த நண்பர் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்குச் சென்ற நேஷ்ராம், நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை தன் கணவரிடம் கூறிய அந்த பெண், பின்னர் டெல்லி வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து நேஷ்ராம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேயை விரட்டும் பூஜை முடிந்து வீடு திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்தது: 18 பேர் காயம்!!
Next post துபாயில் இருந்து போன் மூலம் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ் விசாரணை!!