15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!
15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர்.
கட்டுனேரிய – கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார்.
15 வயது மாணவி சுகயீனமுற்றிருந்தபோது பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளை மாணவி கர்ப்பமாகியுள்ள விடயம் தெரியவந்தது.
2012 ஏபரல் மாதம் இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் முதற்தடவையாக மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
அதன்பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல் மாணவியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் உடலுறவில் ஈடுபட்டதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
மாணவி தற்போது மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating