சொத்து தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற கணவன்–மனைவி!!
பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர்கள் தங்கத்துரை, ராமச்சந்திரன். அண்ணன் – தம்பிகளான இவர்களிடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.
இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சொத்து குறித்து பிரச்சினை எழுப்ப வேண்டாம். பெரியவர்கள் மூலம் பேசி தீர்த்து கொள்வோம் என்று தங்கத்துரை கூறியுள்ளார்.
இதற்கு ராமச்சந்திரன் உடன்படவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கத்துரை வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மனைவி கவிதா மட்டும் இருந்தார்.
அந்த சமயத்தில் ராமச்சந்திரன் தனது மனைவி பூபதியுடன் அங்கு வந்தார். சொத்து குறித்து பேசியதால் அவர்களிடையே சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கணவன் – மனைவி 2 பேரும் சேர்ந்து கவிதாவை அடித்து உதைத்ததுடன் அரிவாளாலும் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து ராமச்சந்திரனும், பூபதியும் அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த கவிதாவை பழனி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாரின்பேரில் பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating