விருத்தாசலத்தில் பிக்பாக்கெட் அடித்த கணவன்-மனைவி கைது!!
Read Time:1 Minute, 8 Second
விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் விநாயகம்(35). இவர் நேற்று மாலை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 8 மாத கைக்குழந்தையுடன் வந்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.200–ஐ பிக்பாக்கெட் அடித்தனர்.
சுதாரித்த விநாயகம், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த 2 பேரையும் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் மதுரை சத்திமங்கலம் பகுதியைச்சேர்ந்த வீரபாண்டி(23), அவரது மனைவி கண்ணம்மா(20), என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் வீரபாண்டி, கண்ணம்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Average Rating