பிரபல பாடலாசிரியரின் மகன் மனைவியுடன் தற்கொலை!!
பிரபல பாலிவுட் பாடலாசிரியர் சந்தோஷ் ஆனந்த். இவரது மகன் சங்கல்ப் ஆனந்த்.
பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் காரில் சென்றார்.
மதுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே காரை நிறுத்திவிட்டு, பின்னர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது மகள் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தற்கொலை செய்து கொண்ட ரயில் தண்டவாளத்தில் கணவன், மனைவி சடலங்களுடன் கிடைத்த பொருட்களுடன், ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், கடும் பொருளாதார நெருக்கடியை தங்கள் குடும்பம் சந்தித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியந்த சந்தோஷ் ஆனந்த், மதுராவுக்கு விரைந்து வந்து, மகன் மற்றும் மருமகளின் உடல்களை பார்த்து கதறி அழுதார்.
70களில் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ்குமாரின் படங்களுக்கு உயிரோட்டமான பாடல்களை எழுதியவர் சந்தோஷ் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating