அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்களை கண்டுபிடிக்க மொரட்டுவ பல்கலை உதவி!!
Read Time:1 Minute, 6 Second
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்களை அடையாளம் காண மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.
சிசிரிவி கமரா மூலம் பெறப்பட்ட சந்தேகநபர்களின் படங்களை அடையாளம் காண மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவி அவசியம் என குற்றத் தடுப்புப் பிரிவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு அண்மை காலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating