எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
Read Time:1 Minute, 18 Second
எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மருத்துவமனைகள் ஏற்கனவே எபோலா நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இபோலாவால் இதுவரையில் மொத்தம் 4922 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்த உயிரிழப்புகளில் 10ஐ தவிர மற்றவை அனைத்தும் எபோலாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளான சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் கினீயில் நிகழ்ந்துள்ளன.
இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் 27 பேர் மாத்திரமே இபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Average Rating