மது அருந்தி, ரகளை செய்த இலங்கை அகதிகள் மூவர் மீது வழக்கு!!
Read Time:1 Minute, 9 Second
தமிழகத்தின் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மதுஅருந்திய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், மது அருந்தும் நபர்களால் விவசாயிகள், வியாபாரிகள் அவதியடைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து, பொலிசார் நேற்று இரவு மார்க்கெட் கமிட்டியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு வாலிபர்கள் மூவர் மது அருந்தி, ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
விசாரணையில், அவர்கள் விருத்தாசலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த மகிந்தன் (26), ராஜ்மோகன் (32), மோகன்ராஜ் (20), என தெரிந்தது. பொலிசார் மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.
Average Rating