உடன்குடியில் முதியவர் மாயம்!!
Read Time:53 Second
உடன்குடி கொட்டங்காடு கீ.லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 75), தொழிலாளி. இவரது மனைவி பால்தங்கம்.
கடந்த மாதம் வீட்டைவிட்டு சென்ற தங்கராஜ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தங்கராஜை தேடி வருகின்றனர்.
அவர் வீட்டை விட்டு செல்லும் போது வெள்ளைகலரில் கருப்பு கோடு போட்ட முழுக்கை சட்டையும், தமிழக அரசு வழங்கிய விலையில்லா வேஷ்டியும் அணிந்திருந்தார்.
Average Rating