வலங்கைமான் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் மாயம்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தை சேர்ந்த சந்திரசேகரபுரம் மேலத்தெரு மலைச்சாமி மகள் வனிதா(32). கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் விருப்பாட்சிபுரம் மணல்வெளித்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெயிண்டர் சேகருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு புகழ் செல்வம் (2) என்ற மகனும், குபேரசெல்வம் என்ற 4 மாத குழந்தையும் உள்ளனர். தற்போது வனிதா குடும்பக்கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தாய்வீட்டில் இருந்து வந்துதார்.
கடந்த 9–ந்தேதி கணவர் சேகர் தனக்கு உடல்நிலை சரியில்லை என தொலைபேசி மூலம் தெரிவித்ததை அடுத்து அவர் குழந்தைகளை அழைத்துகொண்டு அன்று மாலையே கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாட்கள் கழித்து 11–ந்தேதி தனது மகளை காண்பதற்காக மலைச்சாமி மருமகன் வீட்டிற்கு வந்து வனிதாவை தேடியபோது இங்குதான் எங்கேயோ சென்றிருப்பார் என மருமகன் சேகர் கூறியுள்ளார்.
உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் இதுநாள் வரை வனிதா பற்றிய தகவல் தெரியவில்லை. குழந்தைகள் இரண்டையும் வீட்டில் விட்டு தனது மகள் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை ஆகவே தனது மகள் வனிதா பற்றிய விசாரணையை சேகரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மேற்கொள்ள வேண்டும் என வலங்கைமான் போலீசில் மலைச்சாமி புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர். இரு குழந்தைகளை விட்டு தாய் மாயமான செய்தி விருப்பாட்சிபுரம் மணல் வெளித்தெரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating