எதிர்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைப்பு!!
Read Time:1 Minute, 12 Second
இன்று (17) திங்கட்கிழமை கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனமுற்றுள்ளமை மற்றும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து கொள்ளவுள்ளமை காரணமாக கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இன்று நடக்கவிருந்த உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பான உடன்படிக்கையில் திங்கட்கிழமை எதிர்க்கட்சிகள் கைச்சாத்திட இருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் தேரர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating