சிவகிரி அருகே பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சென்ற தாய்-மகள் மாயம்!!
சிவகிரி அருகே உள்ள புரசமேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி ராஜாத்தி (வயது 35).இவர்களது மகள் கிருத்திகா (8).
கிருத்திகா திருச்செங்கோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் ராமதாசுக்கும், ராஜாத்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜாத்தி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நாட்களுக்கு முன்பு தான் ராஜாத்தியை சமாதானப்படுத்தி ராமதாஸ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் மகள் கிருத்திகாவை சிவகிரி பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அவர் ஏற்கனவே படித்து வந்த திருச்செங்கோடு பள்ளியில் டிசி வாங்குவதற்காக ராஜாத்தியும் அவரது மகள் கிருத்திகாவும் சென்றனர்.
ஆனால் இதன்பிறகு அவர்கள் இரவில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவர்களை ராமதாசும் அவரது உறவினர்களும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ராஜாத்தி தனது மகள் கிருத்திகாவுடன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.
இது பற்றி சிவகிரி போலீசில் ராமதாஸ் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜாத்தி–கிருத்திகாவை தேடி வருகிறார்கள்.
Average Rating