கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி கொலை!!
Read Time:53 Second
கொட்டாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த பெண் தமது உறவினர் உள்ளிட்ட இருவருடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான அவர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகியுள்ளது.
இவருக்கு வயது 28. மேலும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating