10,000 பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு!!
பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாத பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து வடக்கு, கிழக்கிற்கும் மாற்றப்பட்டிருந்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அஜித் ரோஹன, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
Average Rating