ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!!
ராஜஸ்தானில் நிலத்தகராறில் கோபம் அடைந்த கணவன், தன் மனைவியின் மூக்கு மற்றும் கை விரல்களை துண்டித்தான்.
போர்கோடா பகுதியைச் சேர்ந்தவர் நந்த் சிங் (வயது 40). இவரது மனைவி ஷிம்லா கன்வா. இருவருக்கும் இடையே தகராறு இருந்ததால் சில வருடங்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கிடையே சொத்து தகராறும் இருந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக பேசுவதற்கு நேற்று ஷிம்லா தன் கணவரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த நந்த் சிங், தனது இளைய சசோதரருடன் சேர்ந்து மனைவியின் மூக்கு மற்றும் கையில் உள்ள 4 விரல்களை துண்டித்து எறிந்துள்ளார். அத்துடன் மனைவியை வெளியில் விடாமல் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிம்லாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து நந்த் மற்றும் அவரது சசோதரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்யவில்லை.
Average Rating